உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே என்ஜினீயர் வீட்டில் 14 பவுன் நகை-பணம் கொள்ளை

Published On 2022-10-14 03:49 GMT   |   Update On 2022-10-14 03:49 GMT
  • கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்.
  • பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

நெல்லை:

நெல்லை பேட்டை திருமங்கைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாபு. இவர் சென்னையில் தங்கியிருந்து என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரதி (வயது34).

கடந்த 11-ந்தேதி ரதி வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் தங்கநகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News