உள்ளூர் செய்திகள்
- பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
- தற்கொலை எண்ணம் தோன்றினால் அதை எவ்வாறு போக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்.
பழனி:
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பழனியில் இன்று டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பழனி அரசு ஆஸ்பத்திரி முன்பு தொடங்கிய பேரணியை தலைமை மருத்துவர் டாக்டர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
தற்கொலை எண்ணம் தோன்றினால் அதை எவ்வாறு போக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.