உள்ளூர் செய்திகள்
அய்யப்பனுக்கு பழங்களால் சிறப்பு அலங்காரம்
- பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அய்யப்பனை வழிபட்டனர்.
பூதலூர்:
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்காட்டுப் பள்ளி அக்னீஸ்வரர் கோவிலில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் சமேத அக்னீஸ்வரசாமி உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, தீபாராதனை காண்பிக் கப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, கோவிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் அய்யப்பனுக்கு விஷூக்கனி தரிசனத்திற்காக அனைத்து வகை பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை காண அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டு அக்னீஸ்வரர் மற்றும் அய்யப்பனை வழிபட்டனர்.