உள்ளூர் செய்திகள்
சரக்கு ஆட்டோவில் 22 மூட்டை ரேசன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது
- வில்லிவாக்கத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் ராஜாஜி நகர், காமராஜர் தெருவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ஆட்டேவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த எண்ணுாரை சேர்ந்த ரஞ்சித்குமாரை(37) கைது செய்தனர். அவர் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரியவந்து. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.