உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ அனைவரையும் வரவேற்றார் அதிகாரிகள் சான்றிதழை சரிபார்த்தனர்.

கொள்ளுக்காரன்குட்டையில் தனியார்வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-07-30 09:27 GMT   |   Update On 2022-07-30 09:27 GMT
  • கொள்ளுக்காரன்குட்டையில் தனியார்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
  • சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பணி ஆணை வழங்க உள்ளனர்.

கடலூர்:

நெய்வேலி தொகுதி பண்ருட்டி ஒன்றியம், மருங்கூர் ஊராட்சி, கொள்ளுக்காரன்கு ட்டைவள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டவேலை வாய்ப்புதுறை, மாவட்ட நிர்வாகம் மாவட்டவேலை வாய்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையிலும்,சபா.ராஜேந்திரன்மு ன்னிலையிலும் நடந்தது. இதில்க்கு2000-க்கும்மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்க லந்துகொண்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர் . இதில்பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை மற்றும் சுயவிவர குறிப்பு ஆகியவற்று டன்ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் நேரில் கலந்து கொண்டனர். பிற்பகல் நடைபெறவுள்ள பணி ஆணை வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன், சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுபணி ஆணை வழங்க உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருகைதரும் அனைவருக்கும் சபா.ராஜேந்திரன் எம்எல்ஏஉணவு ஏற்பாடுகள் செய்து உள்ளார்.

Tags:    

Similar News