உள்ளூர் செய்திகள்

பராமரிப்பு பணி ஒத்திவைப்பு செங்கோட்டை-மதுரை ரெயில் ரத்து அறிவிப்பு வாபஸ்

Published On 2022-09-02 08:54 GMT   |   Update On 2022-09-02 08:54 GMT
  • மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
  • செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

தென்காசி:

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.

அறிவிப்பு வாபஸ்

அதன்படி ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை- செங்கோட்டை-மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் (06663/06664) வருகிற 15-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

Similar News