உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது - மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

Published On 2023-10-12 08:52 GMT   |   Update On 2023-10-12 08:52 GMT
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவை திறக்கப்பட்டது.
  • இதனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்களுடன் நேரில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ஆவுடையார்புரம் மற்றும் ஜெயராஜ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொது கழிப்பிட பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அவை திறக்கப்பட்டது.

இதனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்களுடன் நேரில் சென்று மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார். பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் மக்களின் தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு மாநகராட்சி எழில் மிகு மாநகரமாக மாற்றம் கண்டு வருகிறது. பொதுமக்களின் தேவை மற்றும் கோரிக்கையை ஏற்றுக் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேயருடன் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News