உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தீபக்ஜேக்கப்.

கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்

Published On 2023-07-03 10:04 GMT   |   Update On 2023-07-03 10:04 GMT
  • மக்கள் நேர்காணல் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது.
  • பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அளிக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ்நாட்டில் "மக்கள் நேர்காணல் முகாம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் நடத்த ப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தொண்டராம்பட்டு சரகம், கண்ணுக்குடி மேற்கு கூடுதல் கிராமத்தில் "மக்கள் நேர்காணல் முகாம்" நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க உள்ளது.

மேற்படி மக்கள் நேர்காணல் முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News