உள்ளூர் செய்திகள்

திருவட்டார் அருகே திருப்பூருக்கு வேலைக்கு சென்ற வாலிபர் மாயம் மனைவி போலீசில் புகார்

Published On 2022-10-13 08:19 GMT   |   Update On 2022-10-13 08:19 GMT
  • மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் (வயது 41). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.
  • எனது கணவர் ஜேக்கப் (45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவர் சென்ற மறுநாள் திருப்பூர் வந்து விட்டதாக போன் செய்து நான் 10 நாட்களில் ஊருக்கு வந்து விடுவேன் என கூறி னார்.
  • இது குறித்து திருவட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்கள்.

திருவட்டார், அக்.13-

திருவட்டார் அருகே வீராலிகாட்டுவிளை, மேக்கா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் (வயது 41). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் கூறி யிருப்பதாவது:-

எனது கணவர் ஜேக்கப் (45). இவர் கடந்த ஏப்ரல் மாதம் திருப்பூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். இவர் சென்ற மறுநாள் திருப்பூர் வந்து விட்டதாக போன் செய்து நான் 10 நாட்களில் ஊருக்கு வந்து விடுவேன் என கூறி னார். அதன் பிறகு போன் மூலம் தொடர்பு கொண்டால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. பல்வேறு இடங்களில் உள்ள உற்றார் உறவினர்களிடமும், நண்பர் களிடமும் விசாரித்தேன். அவரை பற்றி எந்த தகவ லும் இல்லை. எனவே காணாமல் போன எனது கணவரை கண்டு பிடித்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இது குறித்து திருவட்டார் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாயமானவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News