உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே லாரி கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி

Published On 2022-08-29 08:55 GMT   |   Update On 2022-08-29 08:55 GMT
  • குட்டி என்பவர் குடிபோதையில் மினி லாரியை நிறுத்தி கமலக்கண்ணனுடன் தகராறில் ஈடுபட்டு மினி லாரி கண்ணாடியை உடைத்தார்.
  • கமலக்கண்ணன் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்:

செஞ்சி அருகே அனந்தபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சங்கீதமங்கலத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் மினி லாரியை ஓட்டி வந்தார். விழுப்புரம் அருகே ஒலக்கூரை பகுதியில் வந்த போது அதே பகுதியை சேர்ந்த குட்டி (வயது 35) என்பவர் குடிபோதையில் மினி லாரியை நிறுத்தி கமலக்கண்ணனுடன் தகராறில் ஈடுபட்டு மினி லாரி கண்ணாடியை உடைத்தார். இதுகுறித்து கமலக்கண்ணன் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News