உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே பிளஸ்-2 மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை

Published On 2022-06-26 08:46 GMT   |   Update On 2022-06-26 08:46 GMT
  • தருமபுரி அருகே பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
  • தந்தை திட்டியதால் அவர் தூக்கில் தொங்கினார்

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பனந்தோப்பு சின்ன மல்லிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் அஜய்குமார்.

தருமபுரியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ.பள்ளி யில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று இரவு படிக்காமல் அஜய்குமார் செல்போனை நோண்டிக்கொண்டிருந்த தாக தெரிகிறது.இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அஜய்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடிந்ததும் எழுந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்த னர். இது குறித்து மதிகோன்பாளை யம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அஜய்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News