உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினத்தில் இன்று இரவு காமதேனு வாகனத்தில் முத்தாரம்மன் பவனி
- தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா திருவிழாவில் 5-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் காமதேனுவாகனத்தில் நவநீதகிஷ்ணர் திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
நேற்று மாலை 5 மணிக்கு வீரபாகு வல்லவராயர் மற்றும் பாரத திருமுகன் திருச்சபைச் சேர்ந்த மோகனசுந்தரம் ஆகியோர்கள் சமய சொற்பொழிவு நடத்தினர். இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.