உள்ளூர் செய்திகள்
களக்காட்டில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
- மணிகண்டன் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தற்போது இவர் களக்காடு நடுத்தெருவில் வசித்து வருகிறார். பெயிண்டர். இவர் சம்பவத்தன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.
மறுநாள் வந்து பார்த்த போது அதனை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டதை அறிந்த மணிகண்டன் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.