உள்ளூர் செய்திகள்
- பெரியகுளம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற தாய்-மகள் மாயமாகினர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முனிசாமி மனைவி சோனியா (வயது 30).
முனிசாமி இறந்து விட்டதால் மகள் அஜித்தாவுடன் (12) தாய் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று 2 பேரும் வெளியேசென்றனர்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்-மகளை தேடி வருகின்றனர்.