உள்ளூர் செய்திகள்

இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி

Published On 2022-08-24 07:49 GMT   |   Update On 2022-08-24 07:49 GMT
  • இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது.
  • வட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெசிந்தா தலைமை தாங்கினர்.

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குறுவள மைய அளவில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் ஆஷா, ஜெசிந்தா தலைமை தாங்கினர்.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ் ராஜ், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதாகர் முன்னிலை வகித்தனர். கற்றல், கற்பித்தல் உத்திகள், செயல்வழி கற்றல் முறைகள் மற்றும் தன்னார்வலர்கள் திறன் மேம்பாடு குறித்து கருத்தாளர்கள் ஆடம்சன், முனீஸ்வரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News