உள்ளூர் செய்திகள்

வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-10-13 08:35 GMT   |   Update On 2023-10-13 08:35 GMT
  • மதுரையில் வைகை கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளர்.
  • ஒரேநாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.

மதுரை

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாள் மழைக்கே தாங்காத மதுரை தத்தளிக்கி றது . வடகிழக்கு பருவமழை தொடர்வதற்கு முன்பாகவே நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கார், இருசக்கர வாகனங்களை மூழ்கடிக்கும் அளவிலே சாலைகளில் தண்ணீர் ஓடியதால், பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் திரும்ப முடியாமல் பலரது வாக னங்கள் தண்ணீரிலே மூழ்கி செயலிழந்தது. அதற்கு சாட்சியாக சிலர் வாக னத்துடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிகழ்வு களும் ஆங்காங்கே நடை பெற்றது.

சாலைகளை எல்லாம் சீர் செய்ய வேண்டும். அதே போல் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் மதுரை மாவட்ட அமைச்சர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஒரே நாள் மழைக்கு மதுரை தத்தளித்துள்ளது.இந்த ஆண்டு அதிகமாக வடகிழக்கு பருவமழை இருப்பதாக கூட வானிலை ஆய்வு மையங்களுடைய கருத்துக்கள் சொல்லப்படு கிறது. வானிலை ஆராய்ச்சி மையத்தியின் எச்ச ரிக்கையை நாம் கவனிக்க வேண்டும். ஆகவே வைகை ஆற்று வரத்து கால்வாய் களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் இன்றைக்கு, ஒரு நாள் மழைக்கு சாலையில் ஆறுகள் போல ஓடும் தண்ணீரை சரி செய்ய உரிய முன் எச்சரிக்கை நட வடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாவட்ட அமைச்சர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்திட ஆய்வு கூட்டத்தை நடத்த முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News