சாலையை கடக்க முயன்ற தொழிலாளி வாகனம் மோதி பலி
- சாலையை கடக்க முயன்ற தொழிலாளி வாகனம் மோதி பலியானார்.
- இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 40). இவருடைய மனைவி சுபத்ரா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நாகராஜ், நாகப்பட்டினம் துறைமுகத்தில் பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி படகுகளுக்கு சப்ளை செய்யும் பணி செய்து வந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் நேற்று கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு நான்குவழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மீது மோதிய வாகனம் குறித்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.