உள்ளூர் செய்திகள்
- கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
- போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது
கரூர்
கரூர் கோவை சாலை தண்ணீர் பந்தல் பிரிவு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக, ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சுசாந்தா ஷெட்டி (வயது 28) என்பவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 25ஆயிரம் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.