உள்ளூர் செய்திகள்
சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
- சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம்
கரூர்:
நஞ்சை புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் ஆடிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.