உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு

Published On 2022-06-24 07:19 GMT   |   Update On 2022-06-24 07:19 GMT
  • மாடியில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
  • கட்டிட வேலை பார்த்து வந்தார்

கரூர்:

கரூர் தெற்கு காந்திகிராமம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 45). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த துரைசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News