உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது

Published On 2023-01-09 06:24 GMT   |   Update On 2023-01-09 06:24 GMT
  • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
  • சட்ட விரோதமாக மது விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர்

கரூர்:

கரூர் மாவட்ட, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாங்கல், கரூர் டவுன், தோகைமலை, லாலாப்பேட்டை, வெள்ளியணை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானம் விற்றதாக செல்வகுமார் (வயது 32), முனுசாமி (53), சேகர் (49), மலர் கொடி (39), தனம் (40), மஞ்சுளா (45), கோபிநாத் (25) செந்தில் (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News