உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
கரூர்:
குளித்தலை அடுத்த, தோகைமலை தெற்கு சேனியர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50), கடைவீதி பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பொதுமக்களிடம் விற்பனை செய்து வந்தார். இதேபோல், வேதாச்சலபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் ( 63)என்பவரும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.