உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவிக்கு கல்வி உபகரணத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வழங்கியபோது எடுத்த படம். 

திசையன்விளை அருகே மகளிர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

Published On 2022-07-15 09:34 GMT   |   Update On 2022-07-15 09:34 GMT
  • நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
  • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

திசையன்விளை:

நெல்லை கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 120-வது பிறந்த நாள் விழா திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் நேற்று மாலை நடந்தது.

மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் அமுதா கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணிசெயலாளர் விவேக் முருகன், நெல்லை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் மருதூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாங்குநேரி வட்டார காங்கிரஸ் தலைவர் வாகை துரைராமஜெயம் வரவேற்று பேசினார். ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.

விழாவில் ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவர் பவான்ஸ், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மகளிர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அமுதா கலைச்செல்வன், களக்காடு வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரியா முருகன், வள்ளியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜேஷ், மலையன்குடியிருப்பு ராஜேந்திரன், மன்னார்புரம் மார்டீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் விஜயபெருமாள் நன்றி கூறினார்.

Tags:    

Similar News