உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே அரசு பஸ்சில் சென்ற மூதாட்டியிடம் நகை 'அபேஸ்'

Published On 2022-06-29 09:22 GMT   |   Update On 2022-06-29 09:22 GMT
  • கோமதி கழுத்தில் கிடந்த செயினை கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

களக்காடு அருகே உள்ள டோனாவூர் செட்டிமேடு வடக்கு தெருவை சேர்ந்தவர் தளவாய். இவரது மனைவி கோமதி(வயது 70).

இவர் சம்பவத்தன்று செட்டிமேட்டில் இருந்து களக்காட்டுக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ் களக்காடு பஸ் நிலையத்திற்கு சென்றடைந்ததும் அவர் கீழே இறங்கி பார்த்தார்.

அப்போது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ கோமதி கழுத்தில் கிடந்த செயினை பறித்து சென்றதை அறிந்த அவர் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News