உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் கலெக்டர் அதிரடி உத்தரவு

Published On 2022-07-31 07:37 GMT   |   Update On 2022-07-31 07:37 GMT
  • விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் மோகன் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மானியம் ஒன்றை அறிவித்தார்.

அதில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட உலக சிந்தனை அற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வங்கிகளில் இருந்து பெரும் கடன் தொகையில் 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 15 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News