உள்ளூர் செய்திகள்

பல்லாவரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை- என்ஜினீயர் உள்பட 3 வாலிபர்கள் கைது

Published On 2023-08-17 10:00 GMT   |   Update On 2023-08-17 10:00 GMT
  • கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.
  • 3 பேரும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.

பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடபழனி, கே.கே. நகர், கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அஜய், பூந்தமல்லி, சுமித்ரா நகர் 3-வது தெருவை சேர்ந்த மரிய அந்தோணி செல்வம், மற்றும் போரூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணு ஆகியோர் பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான விஷ்ணு சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார்.

Tags:    

Similar News