உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

நத்தம் பகுதியில் 402 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்

Published On 2022-09-10 03:57 GMT   |   Update On 2022-09-10 03:57 GMT
  • நத்தம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.
  • 402 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கப்பட்டது.

நத்தம்:

நத்தம் அருகே வத்திபட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி மற்றும் அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா, சிறுகுடி தி.மு.க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலுச்சாமி எம்.பி கலந்துகொண்டு, 402 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் சுகந்தி, சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மாவட்ட பிரதிநிதி அழகர்சாமி, முன்னாள் தி.மு.க நகரசெயலாளர் முத்துகுமார்சாமி உள்ளிட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஒன்றிய, பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News