உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் வேண்டி ஆர்ப்பாட்டம்
- திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அடிப்படை வசதியான சாலை வசதி, கழிவறை வசதி வேண்டி முழக்கங்களை எழுப்பினர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நீலப்புலிகள் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா, தலைமை தாங்கினார்.
நீலப் புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன், துணை பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட தலைவர் காமராஜ், மாநில துணை தலைவர் ரமேஷ் அம்பேத், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருப்பனந்தாள் ஊராட்சி கிராமங்களில் அடிப்படை வசதியான சாலை வசதி கழிவறை வசதி குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்பாட்டத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.