உள்ளூர் செய்திகள்

வெட்டப்பட்டுள்ள பனைமரங்கள்.

பனை மரங்கள் வெட்டி அகற்றுவதை தடுக்க வேண்டும்

Published On 2022-09-08 09:18 GMT   |   Update On 2022-09-08 09:18 GMT
  • தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை அதிகாரிகளே முன்னின்று வெட்டி சாய்த்திருக்கிறார்கள்.
  • 100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

திருத்துறைப்பூண்டி:

பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜா, முதல் அமைச்சருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, அருகே தலைக்காடு கண்ணன்மேடு பகுதியில் நீர் நிலை ஆக்கிரமைப்பை அகற்றுகிறோம் என்ற பேரில் தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை அரசு அதிகாரிகளே முன்னின்று வெட்டி சாய்த்திருக்கிறார்கள்.

100-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது.

ஆர்.டி.ஓ, வட்டாச்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் இது நடைபெற்றுள்ளது.

இந்த அதிகாரிகள் மீது முதல் அமைச்சர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பனை மரங்களை வெட்டு வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பருத்திச்சேரி ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News