உள்ளூர் செய்திகள்

மாடு பள்ளத்தில் விழுந்ததால் கணவர் திட்டுவார் என பயந்து விஷம் குடித்த பெண் சாவு

Published On 2022-06-24 10:11 GMT   |   Update On 2022-06-24 10:11 GMT
  • திடீரென ரேவதி பூச்சிமருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
  • சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ரேவதி உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் சரகம் மோட்டான்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேவதி(33). இவர் மாடு மேய்க்க சென்றபோது எதிர்பாராதவிதமாக மாடு ஒரு பள்ளத்திற்குள் தவறி விழுந்தது. இது பற்றிய தகவல் தெரிந்தால் தனது கணவர் சுரேஷ் தன்னை திட்டுவார் என்று ரேவதி பயத்தில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் திடீரென ரேவதி பூச்சிமருந்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ரேவதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News