உள்ளூர் செய்திகள்

பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

ருத்ர மகாகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

Published On 2023-09-02 10:08 GMT   |   Update On 2023-09-02 10:08 GMT
  • விழா நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
  • 6-ந் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த அரியநாயகிபுரத்தில் உள்ள ருத்ர மகா காளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பல்வேறு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி விரத மிருந்த ஏராளமான பக்தர்கள் அரசலாற்றங்கரையில் இருந்து பால்குடம், சக்தி கரகம், வேல், அக்னி கொப்பரை, காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து, அம்மன் மற்றும் பரிவார தெய்வ ங்களுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.

அதனைத் தொட்ந்து, நாளை அம்மன் வீதிஉலா காட்சியும், 5-ந் தேதி மகா காளியம்மன் அக்கா, தங்கை திருநடன வீதிஉலா நிகழ்ச்சியும், 6-ந் தேதி கஞ்சி வார்த்தல், விடையாற்றி நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News