நலிவுற்ற குடும்பங்களுக்கு வீடு கட்ட பேருதவி புரிந்தமைக்கு பாராட்டு
- மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நலிவுற்ற குடும்பத்தினருக்கு வீடு கட்டித்தரும் பெரும்பணியை மேற்கொண்டது.
- 2 வீடுகள் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்டு அவைகள் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் ஏழை எளிய மற்றும் நலிவுற்ற குடும்பத்தினருக்கு பல்வேறு விதமான சேவைப் பணிகளை ஆற்றி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோளை ஏற்று மதர் தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 4 நலிவுற்ற குடும்பத்தினருக்கு வீடு கட்டித்தரும் பெரும்பணியை மேற்கொண்டது.இதில் 2 வீடுகள் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்டு அவைகள் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு அவ்வீடுகளில் அவர்கள் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 2 வீடுகள் வெகுவிரைவில் கட்டிமுடி க்கப்படும் தருவாயில் உள்ளன.
இந்த நிலையில் தஞ்சா வூரில் நடைபெற்ற 75-வது சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் 4 நலிவுற்ற குடும்பங்களுக்கு வீடுகட்டித்தருவதற்கு பேரு தவியாக இருந்த மதர் தெரசா பவுண்டேசன் சேர்மேன் சவரிமு த்துவை பாராட்டி அவருக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.