உள்ளூர் செய்திகள்
- இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.
- இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:
இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தும்பாயி (வயது85). இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் சித்துராஜ் ஆகியோருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.
நேற்று காலை சித்துராஜ் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றபோது கிணற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அப்போது கிணற்றை எட்டிப் பார்த்தபோது தும்பாயி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீயணைப்பு துறையினர் மூலம் பிணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.