உள்ளூர் செய்திகள்

ஆலாந்துறையில் ேதாட்டத்தில் கணவருடன் மதுகுடித்த பெண் சாவு

Published On 2022-08-08 09:42 GMT   |   Update On 2022-08-08 09:42 GMT
  • கணவன்-மனைவிக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மதுகுடித்து வந்தனர்.
  • ராஜமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை:

கோவை ஆலாந்துறையை அடுத்த போளுவாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வேலுமணி (வயது 37). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜமணி (34). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு குடிப்பழக்கம் உள்ளது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மதுகுடித்து வந்தனர். சம்பவத்தன்று இருவரும் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றனர். அங்கு வழக்கம் போல மது குடித்தனர்.

பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்றனர். மறுநாள் காலை வேலுமணி எழுந்தார். அப்போது ராஜமணி அசைவின்றி கிடந்ததை அவர் பார்த்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

அதில் வந்த டாக்டர் ராஜமணியை பரிசோதனை செய்தார். இதில் அவர் ஏற்கனேவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News