உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் தொட்டிலில் விளையாடிய சிறுமி பலி

Published On 2022-07-05 09:44 GMT   |   Update On 2022-07-05 09:44 GMT
  • சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.
  • போலீசார் மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை

கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா குமாரி (38). இவர்களது மகள் சஜிதா (15).

இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சஜிதா வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி விளையாடி கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக தொட்டில் அருகில் இருந்த மரமேஜை மீது மோதியது. இதில் தொட்டில் இருந்த சஜிதாவின் தலை மற்றும் நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சஜிதாவை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொட்டிலில் விளையாடிய சிறுமி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News