உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத 790 பேருக்கு அனுமதி

Published On 2023-05-06 05:32 GMT   |   Update On 2023-05-06 05:32 GMT
  • ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

தேனி:

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் நாளை நாடு முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத 790 மாணவ-மாணவிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தேசிய தேர்வு முகமை வழிகாட்டுதலின்படி தங்கள் ஹால்டிக்கெட்டை தரவிரக்கம் செய்து தேர்வு நடைபெறும் மையமான முத்துதேவன்பட்டி வேலம்மாள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்கள் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News