உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது - ரூ.1.62 லட்சம் பறிமுதல்
- உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சூதாட்டம்
உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 7 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து நடத்திய விசாரணை யில் அங்கிருந்தவர்கள் உடையாம்புளியை சேர்ந்த ரவி (60), முத்துக்கண்ணன் (37), வீரவநல்லூரை சேர்ந்த அங்கப்பன் (49), கிருஷ்ணாபுரம் பெரியசாமி (40), நாகல்குளம் காசிப்பாண்டி (40), அம்பாசமுத்திரம் ஜெகநாதன் (60), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் (33) ஆகிய 7 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 62 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.