உள்ளூர் செய்திகள்
தொண்டாமுத்தூரில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல்
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
வடவள்ளி:
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அந்த பகுதியில் இன்று தொண்டாமுத்தூர் ேபாலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 17-ந் தேதி வடமாநில வாலிபர் ஒருவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் அந்த பகுதியில் திரியும் வடமாநில வாலிபர்கள் ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் சென்று அச்சுறுத்தும் விதமாக பயணிக்கிறார்கள்.
சந்தைப்பேட்டை பகுதியில் திடீர், திடீரென கூட்டமாக கூடுகிறார்கள். இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறிலும் ஈடுபடுகிறார்கள். தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள்.
எனவே வடமாநில வாலிபர்களின் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர்.