உள்ளூர் செய்திகள்
போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-26 10:16 GMT   |   Update On 2022-05-26 10:16 GMT
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்,
கோவை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில்  தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க  வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பினர். இதில் 100 கற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News