உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பிளம்பர் பலி
பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி பிளம்பர் பலியானார்.
பாலக்கோடு,
கர்நாடகா மாநிலம், பெங்களுரு அருகே ஒசஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சம்பத். பெயிண்டர். இவர் தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் ராஜா என்பவரின் வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அவருடைய மகன் ஹர்சா (வயது20). டிப்ளமோ முடித்து பிளம்பர் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் ஹர்சா நேற்று காலை பொம்மனூர் ஏரியில் குளிக்க சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரியின் கரையில் ஹர்சாவின் செருப்பு மற்றும் உடைகள் இருந்தன.
சந்தேமடைந்து ஏரிக்குள் மூழ்கி தேடி பார்த்த போது ஹர்சா நீருக்குள் மூச்சு திணறி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.