உள்ளூர் செய்திகள்
கலைவிழா நடந்த காட்சி.

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா

Published On 2022-05-25 10:48 GMT   |   Update On 2022-05-25 10:48 GMT
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது.
தருமபுரி, 

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா 2022 நடை பெற்றது. கரகாட்டம், சிலம்பா ட்டம், காளியாட்டம், பறையாட்டம் ஆகிய மாணவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 
முத்தாய்ப்பாக, இயற்கை வளம் பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவம் பேணுதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி “பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்” என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. 

இதில் பேராசிரியர் முருகதாஸ் சூரன் கதாப்பா த்திரத்தில் வேடமேற்று மாணவர்களை வழிநடத்தினார்.  கலைவிழாவினை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.
Tags:    

Similar News