உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவி மயங்கி சாவு
ஆம்பூர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பாக்கம் பாளையம் அருகே உள்ள இருளர்குட்டை பகுதியை சேர்ந்தவர் வீராசாமி இவரது மகள் மூலிகா வயது (13).
இவர் சின்னபள்ளிகுப்பத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்துள்ளது.
நோய்க்கு சிகிச்சை அளிக்க பேர்ணம்பட்டு செல்ல ஆம்பூர் பஸ் நிலையத்திற்கு வந்து காத்திருந்தார் அப்போது மூலிகாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவ பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.