உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2022-05-23 09:28 GMT   |   Update On 2022-05-23 09:28 GMT
இருசக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி :

திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). இவர் தனது இரு சக்கர வாகனத்தை வெங்கடேஸ்வரா நகரில் நிறுத்தியிருந்தார். 

அந்த வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து கார்த்திக் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தை திருடியதாக 14 வயது சிறுவன் மற்றும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சீவி, சிவகணேசன் ஆகிய இரண்டு வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர் .14 வயது சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

Tags:    

Similar News