உள்ளூர் செய்திகள்
யூனியன் குழு கூட்டம்

மேல்மலையனூர் யூனியன் குழு கூட்டம்

Published On 2022-05-21 12:10 GMT   |   Update On 2022-05-21 12:10 GMT
மேல்மலையனூர் யூனியன் குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக் கூடத்தில் நடைபெற்றது.

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் யூனியன் குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்றக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு யூனியன் தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் வரவேற்றார்.

கூட்டத்தில் திண்டிவனம் அருகில் சிப்காட் அமைப்பதற்கும், வானுர் அருகே சமத்துவபுரம் திறந்து வைத்ததற்கும், செஞ்சியில் அரசு கல்லூரி அமைக்க உத்தரவிட்டதற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த தொழில்துறை அமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், சிறுபான்மை நலம் மற்றும் உலக தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது.

யூனியனில் செய்யப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் யூனியன் துணை தலைவர் விஜயலட்சுமி, கவுன்சிலர்கள் ஷாகின்பேகம், யசோதரை, பிரியா, முரளி, உதவி பொறியாளர் கருணாகரன், மேலாளர் பிரபாசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச் செல்வன் கலந்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News