உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக குறைந்து வருகிறது.
பென்னாகரம்,
தமிழக நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டு,ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம், ஓசூர் மற்றும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறநை்ததால் இன்று காலை ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்து வருகிறது.
இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ்உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்க ப்பட்டது.
ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க கூடாது. படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என தருமபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார்.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பொதுமக்களின் நலன் கருதி முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். தமிழக கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து அளந்து கண்காணித்து வருகின்றனர்.