உள்ளூர் செய்திகள்
தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம்
கடத்தூர் அருகே தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி கோவில்வனம் பகுதியை சார்ந்த முருகன் (45) விவசாயி. இவரது மனைவி சந்திரா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் வீட்டி ன்மண் சுவர் மீது நனைந்து இன்று அதிகாலை வீட்டில் இரு பக்க சுவர் சரிந்து விழுந்தது.
இதில் அதிஷ்டவசமாக குடும்பத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதுகுறித்து உடனடியாக தாளநத்தம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தனர். கடத்தூர் வருவாய் ஆய்வாளர் ஸ்டாலின் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுவீட்டின் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.