உள்ளூர் செய்திகள்
விழாவில் சபாநாயகர் அப்பாவு மாணவிகளுக்கு பரிசு வழங்கிய காட்சி.

திசையன்விளை வி.எஸ்.ஆர். பள்ளி ஆண்டு விழா

Published On 2022-05-17 09:28 GMT   |   Update On 2022-05-17 09:28 GMT
திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது.
திசையன்விளை:

திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் 6-வது ஆண்டு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார்.

பாரதியார், காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தலைவர்களின் வேடம் அணிந்த மாணவர்கள் வரவேற்றனர். பள்ளி நிர்வாக இயக்குனர் சவுமியா ஜெகதீஷ், முதல்வர் எலிசபெத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

பள்ளி முதல்வர் எலிசபெத் ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு, கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.

மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. சபாநாயகர் அப்பாவு குறித்து மாணவி ஜியோலின் பேசினார்.

 இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களையும் கூறிய யு.கே.ஜி. மாணவன் தன்விக்டோனி, மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்து அசத்தினான். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News