உள்ளூர் செய்திகள்
மேச்சேரியில் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை
மேச்சேரியில் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
மேட்டூர்:
மேச்சேரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் வட்டார தொழில்நுட்ப குழு கூட்டம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தொழில்நுட்ப குழு ஒருங்கிணைப்பாளர் வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா தலைமை தாங்கினார்.
ஆலோசனைக்குழு தலைவர் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜோதிபாசு, வேளாண் அலுவலர் பாலு மகேந்திரன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அதிகாரி கஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர் சின்ன மாரியப்பன், உதவி பொறியாளர் ஜான்சி ராணி ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை 2021-22 -ம் ஆண்டில் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இனங்கள் குறித்து உதவி தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி விளக்கம் அளித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மகேந்திரன் செய்திருந்தார்.