உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் அருகே குழந்தை பெற்ற 12 வயது சிறுமி
ஆம்பூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் ஆம்பூரில் உள்ள பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவிக்கு நேற்று முன்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சமூகநல பாதுகாப்பு அலுவலருக்கு ஆஸ்பத்திரியிலிருந்து புகார் செய்தனர். இது சம்பந்தமாக சமூகநலத்துறை அதிகாரிகள் நேற்று இரவு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் ஆம்பூரில் உள்ள பள்ளியில் 7 ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவிக்கு நேற்று முன்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட சமூகநல பாதுகாப்பு அலுவலருக்கு ஆஸ்பத்திரியிலிருந்து புகார் செய்தனர். இது சம்பந்தமாக சமூகநலத்துறை அதிகாரிகள் நேற்று இரவு ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து சிறுமியிடம் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.