உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் தோட்டத்தொழிலாளர்கள் ஊர்வலம் நடைபெற்றது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மே தின விழா மற்றும் பேரணி, பொதுக்கூட்டம் அதன் பொது செயலாளர் வி. க. நல்லமுத்து தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தோட்ட தொழிலாளர் 500க்கும் மேற்பட்டோர் பச்சை மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர்.
பேரணியில் தொழிலா–ளர்களுக்கு எதிராக ஏற்றப்படும் சட்டங்களை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணி ஒண்டிகடை ரவுண்டானா பகுதியில் இருந்து ஏற்காடு பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஷோபாவில் மே தின விழா மற்றும் பொதுக்கூட்டம் நடை–பெற்றது. இவ்விழாவினை நீலமலை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வி.க.நல்லமுத்து ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பழனிசாமி துணைத் தலைவர் முருகேசன், பாலகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், தேவராஜ், இளங்கோவன், ராமலிங்கம், சேலம் உருக்காலை ஐ.என்.டி.யூ.சி. சங்கத்தினர் கலந்து கொண்டனர்.